தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதோடு சீசன் அருமையாக உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாரல் இல்லை. மொத்தம் உள்ள 90 நாட்கள் சீசனில் 60 நாட்கள் அதாவது மூன்றில் இரு பங்கு சீசன் காலம் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒரு சில தினங்கள் மட்டுமே சாரல் பெய்தது. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் இல்லாத நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.