ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 151 மேற்பட்ட நதிகளிலிருந்து தண்ணீர் எடுத்து அயோத்தி வந்த சகோதரர்கள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 151 மேற்பட்ட நதிகளில் இருந்து வயதான சகோதரர்கள் இருவர் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். 1968 முதல், 151 ஆறுகள், 8 பெரிய ஆறுகள், 3 கடல்களில் இருந்து தண்ணீரும், இலங்கையின் 16 இடங்களிலிருந்து மண்ணும் சேகரித்து வந்துள்ளோம் என்றும் சகோதரர் ராதே சியாம் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 200 பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Related Stories: