புதுடெல்லி: இந்தியாவில் ஆக. 31 வரை சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை தடை செய்தது. அதன்பின் மே 25ம் தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகைகள் பின்பற்றி உள்நாட்டு பயணிகள் விமான சேவை மட்டும் தொடங்கியது. எனினும், ஒரு சில விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மட்டுமே உள்நாட்டில் சேவை செய்து வருகின்றன. இதற்காக பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனினும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு எப்போது அனுமதியளிக்கப்படும் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.