ஈரோடு: 12ம் வகுப்பு படித்துக்கொண்டே 11ம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8,32,475 பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 2020 பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27ம் தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பிளஸ்-1 பொதுத்தேர்வில்ஒஃ 96.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.