மயிலாடுதுறை அருகே நெல் விதைப்பை அழித்து சாலை அமைக்கும் பணி: விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரியில் விவசாயி செந்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் குறுவை நெல் விதைத்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சிலர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல் விதைப்பு அழிக்கப்பட்டது. பணி தொடங்குவது குறித்து தனக்கு அதிகாரிகள் எந்த தகவலும் அளிக்க வில்லை என்று செந்தில் குற்றம்சாட்டினார்.

மேலும் நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய போது, போதிய தொகை தரவில்லை என்றும், இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திடீரென்று பணியை துவங்கியதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் மற்றும் பொறையார் போலீசார் விவாசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது.

Related Stories: