கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றங்கரையோரம் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பூங்காவை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதால் இதனை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நெரூரில் காவிரி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரம்மேந்திராள் ஆலயமும், காசி விசுவநாதர் ஆலயமும் உள்ளது. முக்கிய பவுர்ணமி, அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நு£ற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வார்கள். இதன் காரணமாக, இந்த பகுதிக்கு வரும் மக்கள் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றங்கரைக்கு எதிரே சிறுவர்கள் விளையாடும் வசதிகளுடன் கூடிய பூங்கா அமைத்து தரப்பட்டது.