அண்ணாநகர்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் புகார்களை கொடுக்க காவல் நிலையங்களுக்கு நேரில் செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படி இருந்தும் ஒரு சிலர் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால் புகாரை வாங்காமல், “கொரோனா பணியில் உள்ளோம்” என்று சில போலீசார் சாக்கு போக்கு சொல்கின்றனர். இதேபோல், சமீப காலமாக அண்ணா நகர் மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம், ஐ.சி.எப், அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வழிப்பறி, செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, கொலை, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதுதொடர்பாக அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் அண்ணா நகர் மாவட்ட எல்லை மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவித்து இருந்தார்.