நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இறந்தவர் உடலை அகற்ற 10 மணி நேரம் ஆனதால் நோயாளிகள் வெளியே வந்து போராட்டம் நடத்தினர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக் காக ஒதுக்கப்பட்டுள்ள இஎன்டி வார்டில் நேற்று முன்தினம் சங்கரன்கோவிலை சேர்ந்த 65 வயது நோயாளி இறந்தார். அவரது உடலை அப்புறப்படுத்தி இறுதி சடங்கிற்கு கொண்டு செல்ல உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். பகல் ஒரு மணிக்கு அவர் இறந்த நிலையில், உடலை வெளியே கொண்டு செல்ல மாலை 4 மணி வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுமார் அரைமணி நேரம் வார்டை விட்டு வெளியில் வந்து போராடினர்.