கரூர் ராயனூர் பகுதி பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் ராயனூர் பாசன வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து ராயனூர் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் சரிவர தூர் வாராத காரணத்தினால் மழைநீர் குளம் போல தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

எனவே பாசன வாய்க்காலை தூர் வாரி தண்ணீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பாசன வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: