நாகர்கோவில்: நாகர்கோவிலில் மழை நீர் செல்ல ஏதுவாக கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் முன்பு பாசனத்திற்காக பயன்பட்ட கால்வாய்கள் ஆகும். சில பகுதிகளில் ஆக்ரமிப்புகளால் இந்த கால்வாய்கள் காணாமல் போயுள்ளன. சில பகுதிகள் குறுகிப் போயுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழியின்றி தெருக்களில் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. தற்ேபாது கோட்டாறு பஜனை மடத் தெரு மற்றும் வடசேரி காங்கேயன் ஓடையில் மண் சேர்ந்து மேடாகவும், சில பகுதிகளில் ஆக்ரமிப்பு காரணமாகவும், இந்த கால்வாய் குறுகிப் போயுள்ளது. இதனால் அசம்பு சாலையில் சற்று மிதமான மழை பெய்தால் கூட கிருஷ்ணன்கோயில் அருணாங்குளம் ஓடையில் இருந்து மழைநீரும் கழிவுநீரும் கலந்து, ஆராட்டு ரோட்டில் ஆறாக பாய்ந்து வந்து பாலமோர் சாலையில் காங்கேயன் ஓடை மற்றும் சாலையை மூழ்கடித்து செல்கின்றது.