திருவையாறு: தஞ்சை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரின் உயிரும் பிரிந்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்புராவ்(92). சென்னை பிரசிடன்சி கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஹேமா(88). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. கடந்த 3 ஆண்டுகளாக திருவையாறு தியாகராஜர் காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணியளவில் உடல்நிலை சரியில்லாமல் ஹேமா இறந்ததால் தனக்கு இனிமேல் யாரும் இல்லையே என்ற மனவேதனையில் சுப்புராவ் காணப்பட்டார்.