3-வது கட்ட தளர்வு விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தீவிரம்..!

டெல்லி: 3-வது கட்ட தளர்வு விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 25% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட உள்ளது.  மெட்ரோ ரயில்கள் ஓடவும் வாய்ப்பு இல்லை. ஆகஸ்ட் 12 வரை ரயில்கள் இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்துகள் இயக்கம் குறித்து மாநிலங்களே முடிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 3-வது கட்ட ஊரடங்கு தளர்வு நடைமுறைக்கு வருகிறது. 2-வது கட்ட ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ம் தேதியுடன் முடிகிறது.

Related Stories: