திருமலை: ஆந்திராவில் தக்காளி பயிரிட போதிய பணம் இல்லாததால், தனது 2 மகள்களை கலப்பையில் பூட்டி நிலத்தை ஒரு விவசாயி உழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் விவசாயத்தை தொடங்கியுள்ளனர். மதனபல்லியை சேர்ந்தவர் விவசாயி நாகேஸ்வர ராவ். இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். ஆனால், ஏற்கனவே விளைவித்த தக்காளியை கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்க முடியாததால், கடும் நஷ்டத்தை சந்தித்தார். இதனால், மீண்டும் தக்காளி பயிரிட போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.