குடியாத்தம்: குடியாத்தம் அருகே கொரோனா நோயாளியை அழைத்து சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதாகி பாதியில் நின்றது. இதையடுத்து அந்த நோயாளியும் சேர்ந்து ஆம்புலன்சை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவரை 108 ஆம்புலன்சில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றனர். குடியாத்தம்- நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது 108 ஆம்புலன்ஸ் திடீரென பழுதாகி நின்றுவிட்டது.