திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை, ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தினசரி நடைபெறும் ஆறுகால பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் வழக்கம்போல நடந்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான சிவாச்சாரியார்கள், சமூக இடைவெளியுடன் தொடர்ந்து கோயில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர பிரமோற்சவ விழா, நேற்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜை, வழிபாடுகளுடன் சிவாச்சாரியர்கள் கொடியேற்றினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்
- ஆதிபுர பிரமோர்சவம்
- தரிசனம்
- பக்தர்கள்
- திருவண்ணாமலை அண்ணாமலை கோவில்
- திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில்: ஆன்லைன் பக்தர்கள் தரிசனம்