தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்பட 8 ஒன்றியங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துபயிர்களில் ஒன்று நிலக்கடலையாகும். தர்மபுரி மாவட்டத்தில் தான் நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகம். மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பி வைகாசி பட்டத்தில் (மே, ஜூன் மாதங்களில்) நிலக்கடலை நடவு செய்யப்படும். இதே போல் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபர், நவம்பர் மாதம் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும்.