அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் உயரம் 141 அடியில் இருந்து, 161 அடியாக உயர்த்தப்படுகிறது. கோயில் வளாகத்தில் கூடுதலாக 2 மண்டபங்கள் கட்டப்பட உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்பாடுகளை, ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ செய்து வருகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தற்போதுள்ள வரைப்படத்தின்படி ராமர் கோயலின் உயரம் 140 அடியாக உள்ளது. இதை மேலும் 20 அடிகள் உயர்த்த திடீரென திட்டமிடப்பட்டு உள்ளது.