தஞ்சாவூர் பற்றி அவதூறு பேச்சு!: நடிகை வனிதாவுக்கு வலுக்கும் கண்டனம்.. காவல்நிலையத்தில் புகார் அளிக்க விவசாயசங்கத்தினர் முடிவு..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூரை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் வனிதா மீது பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார். தொடர்ந்து, சமூக வலைதளத்தில் நடிகைகளுடனான விவாதத்தின் போது, எங்க ஊர் தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது இயல்பு.

என் அப்பா விஜயகுமார் கூட இரண்டு திருமணங்கள் செய்தவர் தான் என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்கு இரண்டு திருமணம்தான் பன்னிருப்பாங்க. அது தான் அங்க வழக்கம் என்றும் அது தவறு இல்லை என்றும் வனிதா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள விவசாயசங்க நிர்வாகி மகேந்திரன் இது தொடர்பாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனிடையே நடிகர் நயன்தாராவை பற்றி நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டர் பதிவிட்டது வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதற்கு நயன்தாராவின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. மேலும்  தஞ்சை பற்றி அவதூறாக பேசியதாகவும், எனவே அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: