சின்னமனூர்: சின்னமனூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சின்னமனூர் அருகே வேம்படிகளம் முல்லைபெரியாற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் தண்ணீரை உழவர் சந்தை அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நிறைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக நகரில் உள்ள 27 வார்டுகளிலும் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.