செங்கல்பட்டு: செங்கல்பட்டு எஸ்பியாக இருப்பவர் கண்ணன். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய இவர், செங்கல்பட்டை தனி மாவட்டமாக ஏற்படுத்தியபோது, செங்கல்பட்டு எஸ்பியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக எஸ்பி கண்ணனுக்கு, காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர், அலுவலகத்துக்கு வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதற்கிடையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று மாலை வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.