நாகர்கோவில்: நாகர்கோவில், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி கோவிட் ஹெல்த் சென்டரை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக பிளாஸ்மா சிகிச்சை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.