வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வருஷநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், செங்குளம்கண்மாய், கோவில்பாறை கண்மாய், புதுக்குளம் கண்மாய், இலந்தைக்குளம் கண்மாய், கோவிலாங்குளம் கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் மற்றும் பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளால் போதிய அளவில் தண்ணீரை தேக்க முடியவில்லை.