திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைசிறையில் வழிப்பறி வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணைக்கைதி சிறையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், டில்லிபாபு என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லிபாபு, கடந்த 7ம் தேதி பொன்னேரி கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் இன்று பொன்னேரி கிளைசிறையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.