அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் தனியார் தோட்டத்து மின்வேலியில் சிக்கி ஆண் யானை இறந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊசி மலையில் மாதேஷ் என்பவர் வனப்பகுதியோரம் உள்ள தனது தோட்டத்துக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். நேற்று உணவு தேடி வந்த ஆண் யானை, மாதேஷ் தோட்டத்துக்கு வந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் வனத்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.