கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு முத்தரசன் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவனர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா அகவை 99ல் அடியெடுத்து வைக்கும் நாளில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகிறது. கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியமாகும் என்பதை வலியுறுத்தி வருபவர். பெருவணிக குழும நிறுவனங்கள் மதவெறி சக்திகளின் துணையோடு அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கும் காலத்தில், நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வரும் நிலையில், அதனை எதிர் கொள்ள, போராடி முறியடிக்க ,என்.சங்கரய்யா போன்ற மூத்த தலைவர்களின் பங்களிப்பு காலத்தின் தேவையாகும். அவர் நீடுழி வாழ்க, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்.

Related Stories: