கொல்லிமலை அருகே மாடு மேய்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர் கைது!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லிமலை அருகே கீரைக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரது மனைவி தீபா என்பவரே கொலை செய்யப்பட்டவர். மாடு மேய்க்க சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் தீபா கிடைக்கவில்லை.

இந்நிலையில் கீரைக்காடு வனப்பகுதி அருகே பெண் ஒருவர் உடலில் துணிகள் இன்றி, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற நடேசன் இறந்துகிடப்பது தனது மனைவி தான் என்பதை உறுதி செய்தார். தீபா உடலில் பல இடங்களில் ரத்த காயங்களும், கற்களால் தாக்கியதற்கான அடையாளங்களும் காணப்பட்டன. பின்னர் அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வனப்பகுதியில் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்ட யாராவது அவரை பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 17 வயதான அருணை போலீசார் கைது செய்துள்ளனர். 17 வயது சிறுவன் என்பதால் அருணை சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்க வாழாவந்திநாடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: