முதன்முறையாக ஒரே நாளில் 29,429 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.36 லட்சத்தை தாண்டியது; 24,309 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 39 ஆயிரத்தை தாண்டியது.   உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா   வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,36,181-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்  மட்டும் 29,429 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 24,309 பேர் உயிரிழந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 582 உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,92,032 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்   அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,67,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை 10,695 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,49,007 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது   இடத்தில்   உள்ளது. தமிழகத்தில் 1,47,324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2099  பேர் உயிரிழந்துள்ள நிலையில், 97,310 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில்  1,15,346 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,446 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 93,236 பேர்   குணமடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 3,19,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 17,807 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 11,416 பேர் குணமடைந்தது.

பீகாரில் 19,284 பேருக்கு பாதிப்பு; 174 பேர் பலி; 12,849 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 600 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 446 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 4379 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 3275 பேர் குணமடைந்தது.

கோவாவில் 2,753 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 1607 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 43,637 பேருக்கு பாதிப்பு; 2069 பேர் பலி; 30,503 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 22,628 பேருக்கு பாதிப்பு; 312 பேர் பலி; 17,090 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 2170 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 1,538 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 8930 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 4438 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 25,571 பேருக்கு பாதிப்பு; 525 பேர் பலி; 19,161 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 4091 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 2427 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 1093 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 946 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,672 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 970 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 318 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 66 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 238 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 159 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 896 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 346 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 14,280 பேருக்கு பாதிப்பு; 74 பேர் பலி; 9864 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 1531 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 829 பேர் குணமடைந்தது.

பஞ்சாப்பில் 8511 பேருக்கு பாதிப்பு; 213 பேர் பலி; 5663 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 3,686 பேருக்கு பாதிப்பு; 50 பேர் பலி; 2,867 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 44,077 பேருக்கு பாதிப்பு; 842 பேர் பலி; 17,390 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 11,173 பேருக்கு பாதிப்பு; 195 பேர் பலி; 6223 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 37,745 பேருக்கு பாதிப்பு; 375 பேர் பலி; 24,840 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 32,838 பேருக்கு பாதிப்பு; 980 பேர் பலி; 19,931 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 39,724 பேருக்கு பாதிப்பு; 983 பேர் பலி; 24,983 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 33,019 பேருக்கு பாதிப்பு; 408 பேர் பலி; 17,467 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 462 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 153 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 19,005 பேருக்கு பாதிப்பு; 673 பேர் பலி; 13,575 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 1309 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 951 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 166 பேருக்கு பாதிப்பு; 109 பேர் குணமடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை.

தாதர் நகர் ஹவேலியில் 520 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 3010 பேர் குணமடைந்துள்ளனர்.

சிக்கிமில் 209 பேருக்கு பாதிப்பு; 87 பேர் குணமடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை.

Related Stories: