செய்யூர்: செய்யூர் அருகே உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்து சென்ற, 1000 லிட்டர் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் அருகே நேற்று அணைக்கட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பதும், அவை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுவதும் தெரியவந்தது.