செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதி கால்வாய் உடையும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் மகாலஷ்மி நகர் அருகில் கொளவாய் ஏரியில் இருந்து உபரியாக வடியும் தண்ணீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழைக் காலங்களில் வடியும் மழைநீர் நீஞ்சல் மடு வழியாக சென்று பாலாற்றில் கலக்கும் வகையில் கால்வாய் உள்ளது. கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வடியும் மழைநீரும் கொளவாய் ஏரியில் இருந்து வடியும் உபரி நீரும் மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள கால்வாய் முழுவதும் நிரம்பி அதை ஒட்டிய பகுதிகளில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.