சென்னை: சென்னையில் போலியாக கால்சென்டர் நடத்தி, பணம் பறித்த கும்பலை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிகளில் கணக்கு வைத்துள்ள சாமானிய மக்களை குறிவைத்து கொள்ளையடிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் போலியாக கால்சென்டர் நடத்திய கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், சிக்கிய சரவணன் மற்றும் செல்வகுமாரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டதன்பேரில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.