கொல்கத்தா: பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பகான் மற்றும் ஏடிகே இணைந்துள்ள நிலையில் புதிய லோகோ மற்றும் சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 130 ஆண்டுகளுக்கும் அதிகமான பாரம்பரிம் மிக்க மோகன் பகான் அணி, ஐஎஸ்எல் தொடரில் களமிறங்கும் அத்லெடிகோ டி கொல்கத்தா (ஏடிகே) கால்பந்து கிளப்புடன் இணைந்து புதிய கால்பந்து கிளப்பாக உருவாகி உள்ளது. ஏடிகே உரிமையாளர்கள் 80 சதவீத பங்குகளையும், மோகன் பகான் தரப்பில் 20 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். இந்த அணிக்கான லோகோ மற்றும் சீருடை அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. மோகன் பகான் அணியின் பாரம்பரியமான கருஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.