ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஜோரி மாவட்டம் நவ்செரா செக்டாரில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த இந்திய வீரர் சம்பூர் குருங், பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்
- துருப்புக்கள்
- பாகிஸ்தான்
- எல்லை
- காஷ்மீர்
- சிப்பாய்
- ஜம்மு
- இந்தியன்
- ரஜோரி
- இராணுவ
- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு