ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கார் மற்றும் மினிவேன் மீது சரக்கு லாரி அடுத்தடுத்து மோதியதால், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (26). இவர், நேற்று தனது தந்தை தீனதயாளன் (50) என்பவரை ஆரணியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மீண்டும் காரில் வீடு திரும்பினார். அப்போது, பெரியபாளையம் அருகே வடமதுரை எம்டிசி நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது. பின்னர், காருக்கு பின்னால் வந்த மினிவேன் மீது மோதியது.