உண்மைக்காக போராடுபவர்களுக்கு எந்த விலையும் இல்லை என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்வதில்லை: ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம்..!!

டெல்லி: தன்னைப் போன்று உலகம் இருக்க வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருப்பதாகவும் அல்லது அவர்களை மிரட்டலாம் என்று அவர் நினைக்கிறார், உண்மைக்காக போராடுபவர்களுக்கு எந்த விலையும் இல்லை என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்வதில்லை என்று இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி அறக்கட்டளை முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைத்த நிலையில் ராகுல்காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய மூன்று அறக்கட்டளைகள் நிதி நடவடிக்கையில் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அதனை விசாரிக்க  மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை  ஆகியவை  வருமான வரி மற்றும் வெளிநாட்டு நன்கொடை விதிகளை மீறியது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழுவை அமைத்துள்ளது.

அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்து விசாரணையைக் கண்காணிக்க உள்ளார் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னைப் போன்று உலகம் இருக்க வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: