தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே மகிமலையாற்றில் நீர்தேக்க தடுப்பணைக்கு அருகில் உள்ள உபரி நீர் வடிக்கால் வாய்க்காலை சீரமைத்து மதகு கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கண்ணப்பன்மூலை என்ற இடத்தில் மகிமலையாற்றில் நீர்தேக்க தடுப்பணை உள்ளது. இது 1918ம் ஆண்டு கட்டப்பட்ட 100 ஆண்டு பழமையானது. தடுப்பணை அருகே மழை மற்றும் வெள்ள காலங்களில் ஆற்றில் அதிக அளவில் வரும்போது வெள்ளம் வராமல் தடுக்க உபரிநீர் வடிகால் வாய்க்கால் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.