தளர்வில்லா ஊரடங்கால் வெறிச்சோடிய பஜார்கள்

ஊத்துக்கோட்டை: கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருந்தது.  அதன்படி, ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், வெங்கல், தாமரைப்பாக்கம், பூச்சிஅத்திப்பேடு ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதேபோல், பூண்டி ஒன்றியத்தில் உள்ள சீத்தஞ்சேரி, பென்னலூர்பேட்டை, கச்சூர்  ஆகிய பகுதிகளில் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால், பஜார் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து சென்னைக்கு சென்ற காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.   

Related Stories: