காஸ் கசிவால் தீ விபத்து: கணவன்-மனைவி காயம்

செய்யூர்: மதுராந்தகம் அருகே காஸ் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் தம்பதியர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுராந்தகம் அருகே மாரிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தீபாஞ்சான் (62). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (60). நேற்று காலை இருவரும் வீட்டில் இருந்தபோது, சிலிண்டரில் திடீர் என காஸ் கசிவு ஏற்பட்டதால், குடிசையில் தீப்பற்றியது. அலறி அடித்து கொண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதில், இருவருக்கும் லேசான காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடு தீப்பற்றியதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கு சென்று போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: