திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது வேதாத்திரி நகர். இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மீது பாலம் அமைப்பதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஒப்பந்தம் விடப்பட்டு, பாலம் கட்டும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர் கழிவுநீர் கால்வாயை அடைத்து வேதாதிரி நகர் செல்லும் சாலைகளை உடைத்து கழிவுநீரை மாற்றுப் பாதையில் செலுத்தினர்.