கோவை: கோவையில் உயிரிழந்த மயிலுக்கு போலீசார் தேசிய கொடி அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவையில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை திருச்சி ரோட்டில் இருந்து எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே மின்மாற்றியில் பெண் மயில் ஒன்று அமா்ந்துள்ளது. அப்போது, உயா் அழுத்த மின் கம்பியின் மீது மயில் அமா்ந்ததால் திடீரென்று மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கம்பிகளுக்கு இடையே சிக்கித் தொங்கியது. தேசிய பறவையான மயில் மின்சாரத்தில் அடிபட்டு உயிரிழந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.