புதுக்கோட்டை: புதுகை அருகே பெண் விஏஓ, சக ஊழியர்கள் தன்னை மதிக்கவில்லை என தாசில்தாருக்கு வாட்ஸ்அப்பில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விஏஓவாக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி(40). இவர், ஆலங்குடி தாசில்தார் கலைமணிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், உடன் பணியாற்றி வரும் சகஊழியர்கள் நான் சொல்வதை கேட்பது இல்லை. அவர்கள் என்னை மதிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவை படித்து பார்த்த தாசில்தார் அதிர்ச்சியடைந்தார்.