புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இது, கடந்த 8 மாதங்களை காட்டிலும் அதிகமாகும்.
ஊரடங்கில் நடக்கும் சண்டைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கடந்த மாதம் மட்டுமே 2,043 புகார்கள்
- குற்றங்கள்
- பெண்களுக்கு எதிரான ஊரடங்கு குற்றங்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்