மும்பை: பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டிடத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கராச்சி நகரில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தையில் நேற்று முன்தினம் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 10 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான கேட்வே ஆப் இந்தியாவில் உள்ள தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.