சென்னை: கிராமப்புற வழிபாட்டுத்தலங்களில் செய்ய வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் கோயிலுக்கு வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கோயிலுக்கு வருபவர்களிடம் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அன்னதானக் கூடங்களிலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க சேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் பிரசாதம், தீர்த்தம், அங்கப்பிரதேசம் போன்றவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிழே விழுந்து வணங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.