ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய பெண் காவலரை தொடர்ந்து, அவரது மாமியார் மற்றும் குழந்தைகளுக்கு கெரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த 22ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற் இருப்பதாக, கடந்த 24ம் தேதி உறுதியானது. இதையடுத்து அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெறுகிறார். இதற்கிடையில், அவரது கணவர், மாமியார் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60 வயதுடைய மாமியார், 6 வயது மகன், 4 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து, அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெறுகின்றனர்.