செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு சென்ற சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு சென்றார். அங்கிருந்த டீன் சாந்திமலர் மற்றும் டாக்டர்களிடம், நோயாளிகளின் நோய்தொற்று குறித்து விசாரித்தார்.சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களிடமும் செல்போன் மூலம் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.