சிதம்பரம்: விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம் நாடு முழுவதும் நேற்று துவங்கியது. சிதம்பரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசின் அவசர சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.