சென்னை: நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறை தடுக்ககூடாது என உத்தரவிடக்கோரிய வழக்கில் காவல்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறப்பட்டதாவது; கடந்த வெள்ளிக்கிழமை தான் போரூரிலிருந்து மூத்த வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பணிக்காக செல்லும் வழியில் காவல்துறையால் தடுக்கப்படுவதாகவும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டாலும் ஆன்லைன் வழியாக நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளுக்காக வழக்கறிஞர்கள் சென்று வர அனுமதிக்கப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.