பாட்னா: பீகார் மாநிலத்தில் கன மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரிந்துள்ளது. பீகாரில் நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 92 ஆக அதிகரித்துள்ளது. 15 கால்நடைகளும் இறந்துள்ளன.