பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி இறந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 15 கால்நடைகளும் இறந்துள்ளன. அதோடு, பல வீடுகள் மின்னல் தாக்கி சேதமடைந்துள்ளது. அதிகபட்சமாக கோபால் கஞ்ச் பகுதியில் 13 பேர் இறந்துள்ளனர்.