டெல்லியில் பரபரப்பு: நாய்க்கு சோறு போட்டது தப்பா?.. கொலையில் முடிந்த சோகம்

புதுடெல்லி: டெல்லியில் தெருநாய்க்கு சோறு போட்ட விவகாரத்தால் 57 வயதான ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் பிரஜ்மோகன் (57) கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு வெளியே ெதருநாய்களுக்கு உணவளிப்பது வழக்கம். அப்போது, அவ்வழியாக சென்ற ​​அஜய் என்பவரை பார்த்து சில நாய்கள் குரைத்துள்ளன. அதனால் ஆவேசப்பட்ட அஜய், நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த பிரஜ்மோகனிடம் தகராறு ெசய்தார். ‘நீ சோறு போடுவதால் தான், இந்த நாய்கள் ஒன்றாக சேர்ந்து குரைக்கின்றன. இரு, உன்னை வந்து கவனித்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

சிறிது நேரம் கழித்து கையில் கத்தியுடன் வந்த அஜய், பிரஜ்ேமாகனை கத்தியால் குத்தித் தாக்கினார். படுகாயமடைந்த அவர், ரத்த ெவள்ளத்தில் சரிந்தார். கொலைவெறி தாக்குதல் நடத்திய அஜய், அங்கிருந்து தப்பிவிட்டார். அவ்வழியாக சென்ற மக்கள் உயிருக்கு போராடிய பிரஜ்மோகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த அஜயை நேற்று டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: