புதுடெல்லி: டெல்லியில் தெருநாய்க்கு சோறு போட்ட விவகாரத்தால் 57 வயதான ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் பிரஜ்மோகன் (57) கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு வெளியே ெதருநாய்களுக்கு உணவளிப்பது வழக்கம். அப்போது, அவ்வழியாக சென்ற அஜய் என்பவரை பார்த்து சில நாய்கள் குரைத்துள்ளன. அதனால் ஆவேசப்பட்ட அஜய், நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த பிரஜ்மோகனிடம் தகராறு ெசய்தார். ‘நீ சோறு போடுவதால் தான், இந்த நாய்கள் ஒன்றாக சேர்ந்து குரைக்கின்றன. இரு, உன்னை வந்து கவனித்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.